கோபப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும்
ஆறுவது சினம்
இல்லாதவர்களுக்குக் கொடுத்தப் பின் உண்ண வேண்டும்
ஐயம் இட்டு உண்
பெற்றோரை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தந்தை தாய்ப் பேண்.
செய்யும் வேலையைச் சரியாகவும் ஒழுங்காகவும் செய்ய வேண்டும்
செய்வன திருந்தச் செய்
பொய் என்று தெரிந்தே அந்தப் பொய்யைப் பேசக்கூடாது
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
படிப்பதை நிறுத்தாதே
ஓதுவது ஒழியேல்
பிறருக்கு நல்லது செய்ய ஆசைப்படு
அறம் செய விரும்பு
நிறைய புத்தகங்களைப் படி
நூல் பல கல்
அளவுக்கு மீறி அதிகமாக உண்ணாதே
மீதூண் விரும்பேல்
அனுபவம் உள்ள பெரியோரின் அறிவுரைகளை மறக்கக்கூடாது.
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
உற்சாகத்தை கைவிட்டுவிடாதே
ஊக்கமது கைவிடேல்
உன்னால் முடிந்த உதவியைச் செய்ய தயங்காதே
இயல்வது கரவேல்
பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்
மேன்மக்கள் சொல் கேள்
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நல்லவற்றைச் செய்யத் தவராதே
நன்மை கடைப்பிடி
பிறருடைய குறையைப் பெரிதுபடுத்திச் சொல்லிக்கொண்டு திரியக்கூடாது
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
பிச்சை எடுப்பது கேவலம்
ஏற்பது இகழ்ச்சி
உலக போக்கிற்கு ஏற்றபடி ஒழுக்கமாக நடந்துகொள்
ஒப்புரவு ஒழுகு
சோம்பேறியாக இருக்காதே
சோம்பித் திரியேல்
உடல்நலக் குறை ஏற்படாதபடி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்
நோய்க்கு இடங்கொடேல்
மனம் விரும்பியபடி எல்லாம் நடக்கக்கூடாது
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
பொறாமையில் பேசாதே
ஔவியம் பேசேல்
ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதைத் தடுக்காதே.
ஈவது விலக்கேல்
காலையில் சீககிரமாக கண் விழிக்க வேண்டும்
வைகறைத் துயில் எழு
நாட்டு மக்களுடன் சண்டை போடாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும்
தேசத்தோடு ஒத்து வாழ்
ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிக் குறை சொல்லக்கூடாது
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்